Thursday, October 15, 2009

சில ஆசைகள் என்றுமே நிராசைதான்! (18+)

கல்லூரியில் படிக்கும்போதூ லலிதாவைக் காதலிக்காத ஆளே இல்லை! அவளிடம் ஜொள்ளுவிடாத மாணவனும் ஏன் ஆசிரியரும் அவனுக்குத்தெரிய இல்லை! லலிதா ஒரு அழகுதான். அவள் பேசினால் ஒரு அழகு, நடந்தால் ஒரு அழகு, சிரித்தால் ஒரு அழகு, அவள் கல்லூரி காண்டீனில் காஃபி குடிப்பதும் ஒரு அழகுதான். எத்தனையோ அப்ளிக்கேஷன் வந்தும் அவள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வசந்த்தைத்தான் காதலித்தாள். அன்று அவள் காதல் இனித்தது. அதைவிட அவள் இனித்தாள். இன்று அவர்கள் கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆச்சு, இன்றும் அவள் ஒரு அழகுதான். ஆனால் வசந்தின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாளா லலிதா? வசந்த் அன்று இரவும் பெருமூச்சுவிட்டுவிட்டுத்தான் தூங்கினான், அவன் ஆசைகள் நிராசையாக ஆனதால். அவன் எத்தனையோ வாதம் செய்துபார்த்தாலும் லலிதா இந்த ஒரு விசயத்தில் பிடிவாதமாக இருந்தாள். நாளையிலிருந்து இவனை தனியாக ஒரு அறையில் தூங்கவும் சொல்லிவிட்டாள்..

**********

“அந்தப் படத்தில் எல்லாம் செய்றாங்க இல்லயா லலிதா?”

“அதனால் என்ன வசந்த்? எனக்கு அது மாதிரி படமே பிடிக்கலை. அருவருப்பா இருக்கு”

“நிறையப்பேர் செய்றாங்க, இந்த ஃபாரத்தில் வாசிச்சியா?”

“ஆமா நீங்க காட்டியதை பதிவுகளைப் பாத்தேன். அனானிமஸா ஒரு சிலர் எழுதி இருக்காங்க. ஆனா எனக்கு சுத்தமாகப் பிடிக்கலை வசந்த்”

“நம்மளும் ட்ரைப் பண்ணினால் என்ன? ட்ரை பண்ணாமல் எப்படித் தெரியும்? உனக்கு பிடிச்சாலும் பிடிக்கும்”

“அது ஹைஜீனிக் இல்லை வசந்த். மேலும் அப்படி செய்யாதனால நீங்க ஒண்ணும் குறைஞ்சிட மாட்டீங்க, வசந்த்!”

“அவங்க எல்லாம் நல்லா இருக்குனுதானே சொல்றாங்க?”

“எனக்கு இது ஒரு லிமிட்டை க்ராஸ் பண்ணி மிருகமாகிக்கொண்டு போறமாதிரி இருக்கு, வசந்த். ஆறாவது அறிவின் துஷ்பிரயோகம்தான் இது”

“நீ ஏன் அப்படி நினைக்கிற?”

“மன்னிக்கவும் வசந்த், நான் நினைக்கலை, அதுதான் உண்மை!”

“இல்லை லலிதா..”

“சரி, எல்லாம் ட்ரை பண்ணனும்னு சொல்றீங்க இல்ல? ஒரு சில ஆம்பளைங்க ஆம்பளைக்ன்களோட படுக்கிறாங்க. அதுவுத்தான் படிக்கிறீங்க. இல்லையா வசந்த்?”

“ஆமா. அதனால?”

“நீங்களும் அது மாதிரி எதுவும் ட்ரை பண்ணியதுண்டா? ஒருவேளை உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கும். ட்ரை பண்ணினால்தானே தெரியும்?”

“ச்சீ”

“நான் என்ன சொல்ல வர்றேன்னா, எல்லாரும் செய்றதை நம்ம செய்யனும்னு ஒண்ணும் இல்லை, வசந்த். நம்ம நம்மளாவே இருப்போமே, டார்லிங்? நம்ம அளவுக்கு அவங்க சந்தோஷமா இருக்காங்கனு எனக்கு தோனலை”

“போர் அடிக்குது, ருட்டீன், லலிதா”

“எதுதான் போர் அடிக்காது? அதுவும் ருட்டீன் ஆனதும் அதுவும் போர் அடிக்கும். அப்புறம் அவன் இப்படி செய்றான், இவ அப்படிச் சொன்னானு புதுசா ஆரம்பிப்பீங்க. உங்களுக்கு எல்லாமே உதிர்த்துவிட்டது வசந்த். எது ரைட், எதுதப்புனு தெரியாமல் பித்துப்பிடிச்சு அலைறீங்க. இட் இஸ் டேஞ்சரஸ், வசந்த். யு ஆர் பிகமிங் சிக், டார்லிங்”

“இல்லை லலிதா..”

“வசந்த்! நான் சொல்லுறதை கேளுங்க, ப்ளீஸ்”

“என்ன சொல்லு”

“தேர் இஸ் நோ லிமிட் ஃபார் திஸ். டோண்ட் யு சீ தட், டார்லிங்?”

“அதனால?”

“ஐ டோண்ட் வாண்ட் டு ட்ரை ஃபைண்ட் த லிமிட்”

“லலிதா! யு ஆர் மை பெட்டர் ஹால்ஃப், ஐ ஆம் ஹானஸ்ட் வித் யு”

“ஸோ அம் ஐ, டார்லிங்”

“ஐ லவ் யு லலிதா”

“ஐ லவ் யு மோர், டார்லிங். நான் ஒண்ணு சொல்றேன் கேக்கிறீங்களா?”

“என்ன?”

“கொஞ்ச நாள் வேற வேற ரூமில் படுப்போமா?”

“ஏன்?”

“உங்க பக்கத்தில் படுத்து ருட்டீன் போர் அடிக்குது. நான் சொல்றதைக் கேளுங்க, சரியா?”அவள் சிரித்தாள்

“ம்ம்”

*****

வசந்த், லலிதாவை அணைத்துக்கொண்டு தூங்கிவிட்டான். அவள், அவன் நெத்தியில் முத்தமிட்டாள். அவன் மட்டுமல்ல, அவளும் தன் கணவன் இப்படி எல்லாம் இருக்கனும் என்று ஆசைப்பட்டு இருக்கிறாள். வசந்த் இப்பொழுது ஆசைப்படுவது போல அவன் இருக்கனும்னு அவள் ஒருநாளும் ஆசைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசைகள் ஆவது எல்லோருக்கும்தான்.

3 comments:

கிரி said...

வருண் கதை ரொம்ப நல்லா இருக்கு..:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

Ottu pottaachchu

வருண் said...

***கிரி said...

வருண் கதை ரொம்ப நல்லா இருக்கு..:-)

16 October, 2009 6:03 AM***

நன்றி, கிரி :))

---------------------------
*** T.V.Radhakrishnan said...

Ottu pottaachchu

16 October, 2009 7:22 AM**

வருகைக்கும், வாசிப்பிற்கும், பரிந்துரை செய்ததற்கும் நன்றி டி வி ஆர் :-))